பெரம்பூர்: ஓட்டேரியில் நன்னடத்தை விதி மீறிய ரவுடியை 282 நாட்கள் சிறையில் அடைக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஓட்டேரி டோபிகானா குடிசை பகுதியைச் சேர்ந்தவர் கமல் (எ) தம்பா (33). இவர் மீது புளியந்தோப்பு, வேப்பேரி, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புளியந்தோப்பு துணை கமிஷனர் முன்பு ஆஜரான இவர், இனிமேல் குற்றச் செயலில் ஈடுபடமாட்டேன், என பிரமாண பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.