விருதுநகர்: சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருவதாக இஸ்ரோ ஆலோசகர் சிவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும், ஆலோசகருமான சிவன் விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இஸ்ரோவில் ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகிறது. விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் வேகமாக நடந்து வருகிறது. மனிதர்களை அனுப்பும் முன்பாக பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது. சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்காக தயாராகி கொண்டு இருக்கிறது. சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருகிறது.