டெல்லி: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கதி சக்தி திட்டம், உந்துகோலாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவே கருதப்படுகிறது. மேலும் இது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதில் ‘கதி சக்தி திட்டம்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று மோடி கூறினார். சாலைகள், ரயில்வே துறைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் இந்தியாவிற்கான நவீன உள்கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது.