சென்னை: பீகார் மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்று வெளியான வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார். அண்மையில் தமிழகத்துக்கு வேலைக்காக வந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 2 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அம்மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பீஹார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில், தொழிலாளர்கள் தாக்கப்படுவம் வீடியோக்களுக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.