திருப்போரூர்: கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் காவல் நிலையங்களில், கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது என காவல் உதவி ஆணையர் ரவிக்குமரன் தெரிவித்துள்ளார். கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரவிக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 92 இரு சக்கர வாகனங்கள், கானத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த 6 இரு சக்கர வாகனங்கள், தாழம்பூர் காவல் நிலையத்தில் 91 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 189 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
