வெற்றிபெற போவது யார்?: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. வெற்றி வித்தியாசம் அதிகரிப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கில் வெற்றி வித்தியாசம் அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கபார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கில் 2011ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் 10,866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கில் 2016ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கில் 2011ல் நடந்த தேர்தலில் காங்கிரசின் திருமகன் ஈவெரா 9,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வித்தியாசம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் காங்கிரஸ் 8429, அதிமுக 2873, நாம் தமிழர் 526, தேமுதிக 112 வாக்குகள் பெற்றுள்ளன. முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை அதிக ஓட்டு பெற்றுள்ளார். முதல் சுற்றில் தேமுதிகவின் ஆனந்த் 112 வாக்கு பெற்ற நிலையில் சுயேச்சை முத்துபாவா 178 வாக்கு பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தற்போது 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல்சுற்று முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது 24812 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக 8128, நாம் தமிழர் கட்சி 1479, தேமுதிக 123, பிற கட்சிகள் 112 வாக்குகள் பெற்றுள்ளது.

Related Stories: