செய்யூர்: சூனாம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அங்கிருந்த ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டதற்கு பசுமை தாயகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது.
இங்கு, சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில், இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதனையொட்டி, சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் ஆலமரத்தை அகற்றினர்.