டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு சிக்கிமில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
