மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்லும் சாலையில், கொக்கிலமேடு கிராமத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் திடீரென சாலையோர மின்கம்பத்தில் ஏறி வயரை கைகளால் பிடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலேயே கருகி இறந்த நிலையில் தொங்கினார். இதை பார்த்ததும் அவ்வழியே நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக வாலிபரின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தற்கொலை செய்தார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: