மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்லும் சாலையில், கொக்கிலமேடு கிராமத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் திடீரென சாலையோர மின்கம்பத்தில் ஏறி வயரை கைகளால் பிடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலேயே கருகி இறந்த நிலையில் தொங்கினார். இதை பார்த்ததும் அவ்வழியே நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.