செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோயினால் விவசாயிகளுக்கு கால்நடை இறப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. கால்நடை வளர்ப்பவர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
