டெல்லி : தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம் என்றார். மேலும் பேசிய அவர், பிரதமர் மோடியும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியும் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி நாசம் ஆக்கியுள்ளன.தங்களுக்கு எதிராக எழும் ஒவ்வொரு குரலையும் நசுக்கி விடுகின்றன. தொழில் அதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் நாட்டிற்கு பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜக சீரழித்துவிட்டது. பாஜகவை வீழ்த்துவதற்கான தேவையை மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.,என்றார்.
