தஞ்சாவூர்: ‘எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல, சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. பொதுக்குழுவை கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை.