பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று காலை ஆண் சடலம் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்தில் தீ வைத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.