டெல்லி: பாரதிய ஜனதா கட்சி அழகுபடுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார். செய்தியாளர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கப்பிரிவு சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் அப்பாவிகளாகி விடுகின்றனர். பாஜக சலவை இயந்திரத்தில் போடப்பட்டவுடன், சோதனையை சந்தித்தவர்கள் தூய்மையாகி விடுவதாக கார்கே பேசினார். இன்னும் எத்தனைக் காலத்துக்கு அமலாக்கப்பிரிவின் சோதனைகள் தொடரும் என தெரியவில்லை.