ராமேஸ்வரம்: படகு மூலம் ராமேஸ்வரம் வந்த இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க இலங்கையை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். இலங்கை தலைமன்னாரில் இருந்து படகில் வந்ததாக தெரிவித்ததுடன் தன்னை அகதியாக பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
