சிலிண்டர் விபத்தில் படுகாயம் நேபாள எம்பி.க்கு மும்பையில் சிகிச்சை

காத்மண்டு: நேபாள எம்பி.யாக இருப்பவர் சந்திரா பண்டாரி(61).நேபாள காங்கிரசை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவரது வீட்டில் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சந்திரா பண்டாரி, அவருடைய தாயார் ஹரிகலா பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிகலா மரணமடைந்தார். இதில் 30 சதவீதம் தீக்காயமடைந்த சந்திரா பண்டாரி  ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார்.மும்பையில் உள்ள தோல் மற்றும் தீக்காயங்களுக்கான தேசிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: