சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் புத்தகம் சம்பந்தமான நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:
உயிரே, உறவே, தமிழே என்ற இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை. பா.ரஞ்சித்தின் ஆரம்பகால விழாக்களில் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நானும், அவரும் இல்லாதபோதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாசாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.