ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 200 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளதா? என 200 பேரின் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தினர். ஆனால், ஆயுதங்கள் ஏதுவும் சிக்கவில்லை. அவர்களில் 10 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் நன்னடத்தை விதிமுறையின்படி தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள 40 பேர் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.