நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட்: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் திடீரென  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தமுடியாமல் போனது.

இதனையடுத்து  இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.-2 ரக ராக்கெட்டை வடிவமைத்தது. இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. 1 ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக மாற்று செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளன. எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2, ஜானஸ்-1 செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்வதாக தெரிவித்துள்ளது.

Related Stories: