சென்னை: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கிறது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ்வாறு மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் பேச்சைக் கேட்க வில்லையென்றால் காவல்துறையில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.