சென்னை: சென்னை மணலியில் ஆபாசமாக வீடியோ எடுத்து காவலர் தன்னை மிரட்டி வருவதாக பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காவலர் செல்லத்துரை, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காவலர் செல்லத்துரையிடம் கேட்டபோது திட்டி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.