செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் முத்தாலம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 27வது ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பூங்கரகத்துடன் கிராமம் முழுவதும் வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர், கோயிலில் பக்தர்கள் முதுகின் மீது உரல் வைத்து நெல் குத்துதல், பச்சை முட்கள் மீது நடத்தல், பறவை காவடி சென்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு செய்வது போன்ற நேர்த்திக்கடன்களை செய்தனர்.