வரத்து அதிகரிப்பு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உபி, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து லாரிகளின் மூலம் காய்கறிகள் வருகிறது. இன்று காலை 600 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. இதனால் ஒரு கிலோ நாட்டு தக்காளி 25 லிருந்து 18க்கும் நவின் தக்காளி 25 லிருந்து 20க்கும் பெரிய வெங்காயம் 25 லிருந்து 16க்கும் சின்ன வெங்காயம் 80 லிருந்து 40க்கும் வெண்டைக்காய் 80லிருந்து 50க்கும் கேரட் 40 லிருந்து 20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் பீன்ஸ் 35 லிருந்து 20க்கும் அவரைக்காய் 35 லிருந்து 20க்கும் சவ்சவ் 20 லிருந்து 12 க்கும் உருளைகிழங்கு 30 லிருந்து 22க்கும் பச்சை மிளகாய் 40 லிருந்து 25க்கும் பச்சை பட்டாணி 200 லிருந்து 35க்கும் விற்பனையாகிறது. ஒரு கட்டு கொத்தமல்லி 5 ரூபாயில் இருந்து ஒரு ரூபாய்க்கும் ஒரு கட்டு புதினா 5 ரூபாயில் இருந்து ஒரு ரூபாய்க்கும் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 50 ரூபாயில் இருந்து 30க்கும் ஒரு கிலோ முருங்கைக்காய் 150 லிருந்து 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெண்டைக்காய், கேரட் போன்ற அனைத்து காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை குறைந்தாலும் காய்கறிகளை வாங்க சென்னை புறநகர் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லதரசிகள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த விலை குறைவு இன்னும் ஒரு மாதம் நீடிக்கும். இவ்வாறு கூறினார்.

Related Stories: