சென்னை: தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை, இதுவரை 4.88 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள் தமிழ்நாடு உணவகம், 10,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், அரசின் திட்டங்களையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல் மாதிரிகளுடன் 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.