திருவனந்தபுரம்: மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜை போலீசார் கைது செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் பாபுராஜ். 1994ல் பீஷ்மாச்சாரியர் என்ற படத்தில் அறிமுகமான இவர், மாயாமோகினி, ராஜமாணிக்கம், ஜோஜி, கூமன் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தை தயாரித்துள்ள இவர், வீரமே வாகை சூடும் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக இடுக்கி மாவட்டம் கல்லாரில் ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் பாபுராஜ் அந்த விவரத்தை மறைத்து கடந்த இரு வருடங்களுக்கு முன் கோதமங்கலத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு ரூ.40 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.