திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் மழையால் பாதித்த பயிர்களை பாமக தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார். கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என ஆய்வுக்கு பின் அன்புமணி பேட்டியளித்தார்.