கிருஷ்ணகிரி: ‘வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள், உள்ளூர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்’ என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எருதாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், உள்ளூரைச் சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறி நடக்க முயன்றனர்.