கோவை: மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கோவை போலீஸ் நிலையத்தில் கணவன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (29). இவரின் மனைவி ஹர்ஷினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ஹர்ஷினி, குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, கார்த்திக் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகளை அழைத்துள்ளார். ஹர்ஷினியின் பெற்றோர் அனுப்ப மறுத்துள்ளதாக தெரிகிறது.
