காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் தெப்பத்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய கோயிலாக இந்த திருக்கோயில் விளங்குகிறது. முன்னதாக, ஏகாம்பரநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து, ஏலவார்குழலியும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 3 முறை தெப்பத்தில் வலம் வந்தனர்.