புழல்: மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கோபால்-கண்ணகி ஆகியோரின் மகன் விஜய்க்கும், ஆனந்தன்-மேரி ஆகியோரின் மகள் ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குலதெய்வம் கோயிலில் திருமணம் நடந்தது. மணமக்கள் வீடு திரும்பும்போது கிராம பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு வித்தியாசமான ஏற்பாடு செய்தனர்.