ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி கௌசல்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 4 வயதில் ஒரு மகனும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் வழக்கம் போல் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கௌசல்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குத்தகை நிலத்தில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார்.