மும்பை: நடிகை இலியானா, மருத்துவமனையில் இருந்தவாறே, அவரது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவர் என்ன நோய்க்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்ஃபி படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு மூன்று பேக் IV என்ற திரவ ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் எனக்கு நல்ல மருத்துவ உதவி கிடைத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.