தண்டையார்பேட்டை: ராயபுரம் ஜிஎம் பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் (35). இவர், மெரினா கடற்கரையில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சஹானா (32). இவர்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அலமாரியில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன் கீழே விழுந்து, சஹானா புடவையில் மண்ணெண்ணெய் பட்டது. அப்போது, அருகில் கொளுத்தி வைத்திருந்த கொசு வர்த்தி மீது புடவை உரசி தீப்பிடித்ததால், அவர் அலறி துடித்தார். இதனைகண்ட சஹானாவின் கணவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அனைத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.