பெரம்பூர்: கொடுங்கையூர் எம்ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வருடம் மே மாதம் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தத்தை (26) தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே பதுங்கியிருந்த ஜீவானந்தத்தை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.