சென்னை: கேரள மாநிலம் மூணாறில் தற்போது உச்சக்கட்ட சுற்றுலா சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து 7 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு அருகே சித்ராபுரத்தில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை இக்குழுவில் உள்ள சரண் (24), தனது நண்பருடன் சேர்ந்து சித்ராபுரம் அருகே கல்லடி வளைவு என்ற பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.