சிவகாசி: சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாயில், நீர்மட்டம் குறைந்ததால், பொதுமக்கள் பரிசலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாய், கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. இந்நிலையில், பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.