சென்னை: தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில், காரை ஓட்டி வந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவி படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வர்ஷூ (22). இவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். தொழிலதிபர் மகளான வர்ஷூ, எப்போதும் காரில் தான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை வழக்கம்போல் காரில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் வர்ஷூ காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த மாணவி வர்ஷூ காருக்குள் சிக்கி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து உடனே பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.