சென்னை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கவின் (28). இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இவருக்கும், அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு சென்ற கவின், செல்போனில் காதலை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியை பார்ப்பதற்காக கவின் நேற்று முன்தினம் மாலை தனது சொகுசு காரில் தர்மபுரியில் இருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். பின்னர், காதலி காவ்யாவுடன் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் குளக்கரை பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.