புதுடெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி 901 போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஒன்றிய ஆயுதப்படை போலீஸ் மற்றும் மாநில போலீஸ் துறையில் வீரதீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி விருது வழங்குவது வழக்கமாகும். இந்தாண்டு வீரதீர செயல்களுக்கான போலீஸ் விருதுக்கு உள்துறை அமைச்சகம் 901 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிஆர்பிஎப்.ஐ சேர்ந்த 48 போலீசார், மகாராஷ்டிராவில் 31, ஜம்மு காஷ்மீரில் 25, ஜார்கண்ட்டில் 9, டெல்லி, சட்டீஸ்கர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து தலா 7 பேருக்கு வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.