சேலம்: சேலம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2012ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிங்களாந்தபுரம் பக்கமுள்ள செல்லப்பம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டார்.