புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். விராலிமலை மேலபச்சாக்குடி பெரியடம் பகுதியில் 10 ஆண்டுக்கு பிறகு இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக மீன்பிடி திருவிழாவுக்காக குவிந்தனர்.