திருவண்ணாமலை: வந்தவாசி அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் 6 மாத கைக்குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். வந்தவாசியை சேர்ந்த இப்ராகிம் , சபீனா தம்பதியின் 6 மாத ஆண் குழந்தை முகமது அசுல் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது. இதனை பெற்றோர் எடுத்து கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் செல் போனில் மூழ்கியபடி அலட்சியமாக இருந்ததால் சிறுது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டான்.