ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில், சிவகாசியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி நடந்த வெடி விபத்தில் சாத்தூரை சேர்ந்த முனீஸ்வரி (32), சங்கர் (60) ஆகியோர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சாத்தூர், சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.