வெம்பக்கோட்டை வெடி விபத்து; மேலும் ஒருவர் பலி: எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில், சிவகாசியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி நடந்த வெடி விபத்தில் சாத்தூரை சேர்ந்த முனீஸ்வரி (32), சங்கர் (60) ஆகியோர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சாத்தூர், சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து (55), சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (26) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன் தினம் இறந்தனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகாசியை சேர்ந்த ராஜ்குமார் (26) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: