காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு கடந்த 180வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஏகனாபுரத்தில் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.