பீஜிங்,: சீனாவில் கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், அங்கு மக்கள் புத்தாண்டை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், பூஜ்ஜிய-கொரோனா கொள்கை அமல்படுத்தப்பட்டது. பின்னர், உலக நாடுகளுக்கான விசாவில் தளர்வு அளிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. பிறகு, சீன புத்தாண்டு வரவிருப்பதையும் மக்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராக, அரசும் பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை திரும்ப பெற்றது. இதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் புத்தாண்டை கொண்டாட தாயகம் திரும்பியதால், புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. இந்நிலையில் சீன புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உடன் நேற்று கோலாகலமாக, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.