லக்னோ: உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் உபி.யில் நடந்தது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ``அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய போவதாக கூறி வரும் கட்சி, முடிவுக்கான நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது.