புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு விசாரணை சவாலானது என்று திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட வெள்ளனூர் காவல் நிலையத்தில் திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர், சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் டிஐஜி சரவணன்சுந்தர் அளித்த பேட்டி: வேங்கைவயல் வழக்கில் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்துறையினருக்கு எந்தவிதமான புறஅழுத்தமும் இல்லை.