பனாஜி: மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து அஷுர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 240 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இது கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.15 மணி தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திய வான்எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உஸ்பெகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.