சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் சாலையை கடக்கும் காட்டு யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் சாலையை கடக்கும் காட்டு யானைகளால் சாலையை பாதுகாப்பாக கடக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே பகல் நேரத்தில் சாலையோரம் கூட்டமாக நடமாடிய காட்டு யானைகள் குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. யானைகள் சாலையை கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தற்போது பகல் நேரங்களில் சாலையோரம் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: