யாதகிரி: பாஜ எப்போதும் வாக்குவங்கிக்கு முக்கியத்துவம் அளிக்காது. வளர்ச்சிப்பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். கர்நாடக மாநிலம் யாதகிரியில் நீர்ப்பாசனம், குடிநீர் திட்டம், கோடேகாலில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடிபேசுகையில், ‘21ம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தண்ணீர் பாதுகாப்பு மிக அவசியம். அடுத்த 25 ஆண்டுகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அம்ருத காலமாக அமைய இருக்கிறது.